“புத்தாண்டை வரவேற்போம்; புதிய மகிழ்ச்சிகளை எதிர்பார்ப்போம்!”
நண்பர்களுக்கும் , பேராசியர்களுக்கும் எனது வணக்கம் ,
“புத்தாண்டை வரவேற்போம்; புதிய மகிழ்ச்சிகளை எதிர்பார்ப்போம்!”
ஒவ்வொரு ஆண்டும் பழைய ஆண்டு முடிந்தவுடன் புதிய ஆண்டு பிறக்கும்போது புத்தாண்டை மகிழ்ச்சியோடு மக்கள் வரவேற்பது வழக்கம்.
தமிழ்நாட்டில் எப்போதுமே, ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வழக்கு மொழி உண்டு. அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் பழைய ஆண்டு முடிந்தவுடன் புதிய ஆண்டு பிறக்கும்போது புத்தாண்டை மகிழ்ச்சியோடு மக்கள் வரவேற்பது வழக்கம். அதேபோல் பழைய ஆண்டுகளில் நடந்த சில பயனளிக்கும் நிகழ்வுகள் புத்தாண்டிலும் தொடரவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் 2020-ம் ஆண்டை பொறுத்தமட்டில், உலகையே கலங்கடித்த கொரோனாவை நினைக்கும்போது, இது அந்த ஆண்டோடு போகட்டும், இந்த ஆண்டு தொடரக்கூடாது என்ற உணர்வே எல்லோருக்கும் இருக்கிறது.
2019-ம் ஆண்டு இறுதி நேரத்தில் சீனாவில் உள்ள உகான் நகரில் தலையெடுத்த கொரோனா எனும் கொடிய அரக்கன், இந்தியாவில் ஜனவரியிலும், தமிழ்நாட்டில் மார்ச் மாதத்திலும் கால் பதித்தது.
கொரோனா பரவல் தொடங்கியவுடன் மார்ச் 25-ந்தேதி, முதல் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலால் பெருமளவில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வணிகம் வீழ்ச்சியடைந்தது. வேலையிழப்பு அதிகரித்தது. தனிநபர் வருமானமும் பெரும் சரிவை கண்டது. அரசின் வருவாய் அதாலபாதாளதுக்குப் போய், மாநிலத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் நிலையை அடைந்தது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை தொடர்ந்து மூடும் நிலை ஏற்பட்டது. இந்த இன்னல்களை எல்லாம் கடந்த ஆண்டு ஏற்படுத்திவிட்டது.
புத்தாண்டு பிறந்திருக்கிறது!. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கொரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிட்டது, எல்லோருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு, சில மாதங்களுக்குள் கொரோனாவை முற்றிலும் ஒழித்துவிட்டு, தமிழகம் தன் வளர்ச்சிப் பாதையில் மீண்டும் வேகமாக செல்லத்தொடங்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
கொரோனா மீண்டும் தலையெடுக்காது, நசுக்கி ஒழித்துவிட்டோம் என்ற உறுதிப்பாடு மருத்துவரீதியாக வரும் வரையில் முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவதையும் மக்கள் தலையாய கடமையாக கொள்ளவேண்டும் என்பது 12-வது ஊரடங்கை தொடங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் மருத்துவரீதியான அறிவுரையாக இருக்கிறது. எனவே அதனை பின்பற்றுவோம்.
2021-ம் ஆண்டு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எல்லாம் திறக்கப்படும் நன்னாள் விரைவில் வந்துவிடும் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்து இருப்போம். மே மாதத்துக்குள் தமிழக சட்டசபை தேர்தல் நடந்து, அடுத்து யார் ஆட்சி அமைக்க போகிறார்கள்? என்பதற்கும் விடை கிடைத்துவிடும். எப்படி 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் உலகம் மறக்காதோ? அதுபோல் 2021-ம் ஆண்டையும் கொரோனாவுக்கு விடைகொடுத்த ஆண்டாகவும், மீண்டும் வளர்ச்சி பாதையில் தமிழகம் பீடுநடை போடும் ஆண்டாகவும் தமிழகம் காண வேண்டும். அந்தவகையில் ‘2020-ம் ஆண்டே போ..., போ.., திரும்பி வராதே..., 2021-ம் ஆண்டே வா..., வா..., வளங்களை கொண்டு வா...’ என்போம்…
“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்”
என்கிறது குறள்.
காலம் என்ற சிற்பி நம்மை செதுக்கிக் கொண்டிருக்கிறான். அதில் நாம் சிற்பமா? சிதறி விழும் கற்களா? நாம் சிற்பமாகத்தான் ஆக வேண்டும். அதற்கு சாதனைகள் செய்ய வேண்டும். சவால்களை சந்திக்காமல் சிகரங்களை தொடமுடியாது. அதற்கு தேவையானவற்றை பட்டியலிடுகிறார் திருவள்ளுவர். நாம் மேற்கொள்ளப் போக்கிற செயலின் தன்மை என்ன? அதை நிறைவேற்ற என்னிடம் உள்ள ஆற்றல் என்ன? எதிர்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை உள்ளதா? எதிரியின் வலியினைப் புரிந்து கொண்டோமா? நமக்கு துணை நின்று உற்சாகப்படுத்துகிற நட்பு வட்டம் உள்ளதா? இவற்றில் முக்கியம் என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை. ‘முடியுமா? என்பது மூடத்தனம்; முடியாது என்பது கோழைத்தனம். முடியும் என்பதே மூலதனம்’ என்ற உந்து சக்திதான் ஒருவனை வெற்றியாளன் ஆக்குகிறது. எல்லாம் நன்றாக வாய்த்திறுந்தும், இது என்னால் முடியாது என்னால் முடியாது என்று நடுங்குகிறவனுக்கு வெற்றி இல்லை.
நன்றி !
மு.லட்சுமி
20/UELA/029
コメント